ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்களுடன் முதல்வர் முதல்வரின் முகவரி துறையின் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ்  பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சிறப்பு செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.