மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி அதிமுக பாண்டிச்சேரியில் கூட ட்ரை பண்ண முடியாது. அங்க ஓம் சக்தி சேகர் விடமாட்டார். நம்ம ஆளு இருக்காரு. அதனால எங்கயுமே இவர் முதலமைச்சராகும் கனவெல்லாம் முடிஞ்சு போச்சு. தொடர்ந்து தோத்துட்டே எங்க முதலமைச்சராக வருது. நாடாளுமன்ற தேர்தல் வருது. மொத்தம் 39 தொகுதிகள் ரவீந்திரநாத் ஒன்னு தானே ஜெயிச்சாரு.

அண்ணன் பையன்…  அவர் ஒன்னு தான் ப்ரூப் பண்ணி,  பார்லிமெண்ட்ல ஏடிஎம்கே ஒன்னு என  இருக்குது. இல்ல அந்த பேரும் போயிருக்கிறார். செஞ்சி, சிதம்பரம்,  திருச்சினு நினைக்கிறேன். இந்த மூணு ஊர்ல கொஞ்சம், கொஞ்சம் வித்தியாசத்தில் ஜெயித்திருக்கிறது. மீதி எல்லா இடத்திலும் பார்த்தீங்கன்னா…. இரண்டு லட்சம், மூன்று லட்சம், அஞ்சு லட்சம் என திமுக கூட்டணி – காங்கிரஸ் கூட்டணி வெற்றியை பதிச்சாச்சு.

இப்ப இரண்டா பிளந்து நின்னுட்டு இவர் ஜெயிக்கிறேனா…  நாடாளுமன்றத்திலும் ஜெயிக்க முடியாது. சட்டமன்றத்திலும் ஜெயிக்க முடியாது. பழனிச்சாமி டெபாசிட் கூட வாங்க முடியாது. எடப்பாடி தொகுதியில் கூட நடக்குதா ? இல்லையா ? என்று பாருங்கள்.

பழனிச்சாமியை உட்கார வைத்த பாரதிய ஜனதா கட்சியை கேட்கணும்.  ஒட்டுமொத்த கதையும் முடியப்போகுது. ஆகவே பழனிச்சாமி எங்கிருந்தாலும் தோல்விதான், தோல்வி முகமாகத்தான் இருக்கும். ஒரு இடத்துல கூட ஜெயிக்க முடியாது. அதை நடந்த நாடாளுமன்ற தேர்தல் நிரூபித்து விட்டது, தேனி பதில் சொல்லிவிட்டது என தெரிவித்தார்.