ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய இணை ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர்  வைத்தியலிங்கம், கொடிபிடிக்கும் தொண்டன் தான் முடிவெடுக்க வேண்டும் என்ற அடிதளம் இட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் வகுத்த விதியை காக்க இன்றைக்கு இரண்டாவது தர்ம யுத்தத்தை துவங்கி, தொண்டன்தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர்,  இந்த இயக்கத்தை கட்டி  காப்பவன்,  தொண்டனுக்கு உள்ள உரிமையை  பறித்த எடப்பாடிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து, 

எடப்பாடியை வருகிற 2024லில் அரசியலை விட்டே அப்புறப்படுத்த வேண்டும் என்று இந்த புரட்சி தொண்டன் துணையோடு நாம் வெற்றி பெறுவோம். உலக வரலாறு… இந்திய வரலாறு…  திராவிட வரலாறு.. தமிழ் இனத்தின் வரலாறு.. அனைத்தையும் திறம்பட தன்னுடைய எழுதுகோலால் இளைஞர் இடத்திலும், மக்கள் இடத்திலும் எடுத்து செல்ல கூடிய சிறந்த ஆற்றல் படைத்த அன்பு சகோதரர் மருது அழகுராஜ் புரட்சி தொண்டன் இதழுக்கு ஆசிரியராக இருக்கிறார்.

இந்த பத்திரிக்கை நிச்சயமாக வளரும். அதன் மூலமாக இந்த  இயக்கம்…  அண்ணன் ஓபிஎஸ் 2026 ல் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவார். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதற்கு இந்த புரட்சி தொண்டன்  துணை இருப்பார். நமது உதவி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 200 சந்தாக்களை நாம் வாங்க வேண்டும்.  ஒரு மாதத்திற்குள் அந்த சந்தாக்களை வாங்க மாவட்ட செயலாளர்கள் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டு புரட்சி தொண்டன் நாளிதழ் வளர வேண்டும். ஆழ விருச்சமாக விரிந்து,  இந்த இயக்கத்தை காக்க வேண்டும் என  வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.