மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், உண்மையிலேயே இது ஒரு எழுச்சி மிகுந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள்,  வீராங்கனைகள் கூட்டமாக தான் நடைபெறுகிறது காரணம் மாலை 4 மணியிலிருந்து இங்கே நீங்கள் ஒன்பது தொகுதியில் இருந்தும்.. திண்டுக்கல் பக்கத்துல மணப்பாறையில் இருந்தும்…  லால்குடி – அரியலூர் வரைக்கும்…

கிட்டத்தட்ட தஞ்சை மாவட்டம் அரியலூர் மாவட்டம் அருகில் இருந்தும்….  பெரம்பலூர் வரை உள்ள பகுதிகள் வரை நமது நிர்வாகிகள் இங்கே வந்து எட்டரை மணி ஆனாலும்,  களைப்பில்லாமல் சோர்வில்லாமல்…..  நான் பேச வேண்டும் என்பதற்காக ஆவலோடு..  பொறுமையாக இங்கு அமர்ந்திருக்கின்றீர்கள். உங்களை நம்பித்தான் இந்த இயக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

துரோகம் விளைவிக்கப்பட்ட போது நீங்கள் தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தீர்கள். உங்களில் ஒருவனாக இருந்த என்னை,  இயக்கத்தின் பொதுச்செயலாளராக அமர்த்தியது நீங்கள் தான். மேலூரிலே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமாக தொடங்கியதும் நீங்கள் தான். அன்றைக்கு ஆர்.கே நகரில் 2017 டிசம்பர் மாதத்தில் நாம் தேர்தலில் நின்ற போது நமக்கு கட்சியின் பெயரும் கிடையாது, சின்னமும் கிடையாது.

அண்ணா திமுக என்கிற பெயரை நாம் உபயோகப்படுத்தக் கூடாது என்பதெல்லாம் தேர்தல் ஆணையம் நமக்கு அன்றைக்கு ஆணையிட்ட சமயத்திலே….  அடுத்த நாளே ஆர்.கே நகர் தேர்தல் நவம்பர் 24 அறிவிக்கப்பட்ட போது…  நாம் பெயரில்லாத இயக்கமாக…  தொண்டர்களின் இயக்கமாக…  அன்றைக்கு தமிழ்நாடு முழுவதிலிருந்து வந்த நீங்கள் தான்,  ஆர் கே நகரில் என்னை மாபெரும் வெற்றி பெறச் செய்தீர்கள். அம்மா அவர்களின் தொகுதியிலே…

அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு அடுத்த சட்டமன்ற உறுப்பினராக குக்கர் சின்னம் என்கின்ற புதிய சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட என்னை,   75 ஆண்டு  கட்சியாகிய திமுகவின் உதயசூரியனை டெபாசிட் இழக்க செய்தவர்கள் நீங்கள். இரட்டை இலையை திண்டாடச் செய்தவர்கள் நீங்கள். ஓட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தும் ஆர்.கே நகர் தொகுதி மக்கள் அதற்கெல்லாம் அசராமல் உங்கள் உழைப்பை கண்டு… உங்களை பாராட்டுகின்ற விதமாக…

உங்களின் முயற்சியை பாராட்டுகின்ற விதமாக…  அங்கே உங்களது வேட்பாளராக போட்டியிட்ட என்னை…. சுயேசையாக போட்டியிட்ட என்னை…  மாபெரும் வெற்றி பெறச் செய்தார்கள் என்றால் ? அதற்கு காரணம் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கத்தை தாங்கிப் பிடிக்கின்ற… வழிநடத்துகின்ற…. லட்சோப லட்சம் செயல் வீரர்களும், வீராங்கனைகளும் தான் என்பது உண்மை.

நீங்கள் இங்கே தமிழ்நாடு முழுவதும் இயக்கத்திற்கு அமைப்பை உருவாக்கி, நீங்கள் செயல்படுகின்ற காரணத்தால் தான்….  இயங்குகின்ற காரணத்தினால் தான்….  உங்களின் பிரதிநிதியாக நான் இயங்கி வருகிறேன் என்பதை இந்த நேரத்திலேயே நன்றியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.