நீங்கள் எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தி இருந்தால் தோற்ப்பீர்கள் என்று சொன்னேன். எல்லோருமே என்னை சத்தம் போட்டு, என்னை வெளியே போக சொன்னார்கள். நான் வெளியே வந்தேன். என்னாச்சு ? என சொன்ன… உடனே நானும் அதைத்தான் சொன்னேன் என்று ஓபிஎஸ் சைடில் இருந்து சொல்ல என்ன ஆச்சு ? என்ன ஆச்சு ? என்று பண்ருட்டி ராமச்சந்திரன் பேசத் தொடங்கினார்.

இவங்க மறுபடியும் என்னை முன்னிலைப்படுத்த வேண்டும். அதே நோய் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு. மீண்டும் அவரை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும். அதை தான் டெல்லியில் இருக்கின்ற பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கு இருக்கக்கூடிய முக்கியமான கோரிக்கை. அதை சொல்லிட்டு அண்ணாவையும்,  புரட்சித்தலைவி அம்மாவையும் சொல்லி திசை திருப்ப பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.