பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, இன்றைக்கு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழக முழுவதும் 12, 000 இடங்களுக்கு மேற்பட்ட இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றது. நாம குறிப்பு கொடுத்திருக்கிறோம்… ஒரு ஒரு பஞ்சாயத்தும் அங்க  ஆர்ப்பாட்டம் நடத்தணும். ஏன் ? இந்த உலகத்திலேயே இருக்கிறதுலையே அதிக ஊழல் செய்த அரசு தமிழ்நாட்டில் இருக்கிற திமுக அரசு தான்.

நீங்க பார்த்தா ஊழல் பண்றதில் பி.ஹெச்டி வாங்கிடுவானுங்க தமிழ்நாட்டில இருக்கிற மந்திரி. ஆனால்  எல்லா பயலும் ஜெயிலுக்கு போவான்.அதுல ஒன்னும் சந்தேகம் இல்லை. இப்பதான் ED  ரெண்டு மூணாவது தூத்துக்குடி உள்ளே நுழைய ஆரம்பிச்சிருக்கு, எல்லா பயலும் போவான்.

இப்ப  பாருங்க…  டாஸ்மார்க் இருக்கு, ஜெனரலா யோசிச்சு பார்ப்போம். டாஸ்மாக்கில் எப்படி ஊழல் நடக்கும்ன்னு நினைப்பீங்க ?  ஏதோ அவங்க சரக்கு வாங்குகிற கம்பெனி கிட்ட கமிஷன் வாங்கி இருப்பாங்க…  அதானே,  நார்மலா எல்லா கவர்மெண்ட்லயும் பல கொள்முதல்களில் கமிஷன் வாங்கி இருக்காங்க. இது பொதுவாக நடக்கிற விஷயம். ஆனால் குடிக்கின்ற குடிகாரன் கிட்டயே காசு சுரண்டான்.

அய்யய்யோ எங்க முத்துசாமி அண்ணன் கோவிச்சுகிடுவாரு. குடிகாரன் என்று சொல்லக்கூடாது…. முத்துசாமி அண்ணன் நல்லவர்தான். ஆனால் அவர் யாருக்கு கீழே இருக்கிறார்?  பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியும் என்ன பண்ணனும்னு பலமொழி சொல்லுவாங்க,  நம்முடைய முன்னோர்கள்….  அவர் திமுகவில் இருக்கிறார். அவர் சொல்றார் காலையில தண்ணி அடிக்கிறவன பார்த்தா, அவன குடிகாரன் என சொன்னால் எனக்கு கோவம் வரும் அப்படின்னு சொல்றாரு…அண்ணன் கோச்சிக்கிட்ட கோச்சிட்டு போட்டும்,  எனக்கு நல்ல பிரண்டு தான். ஆனால் இப்ப என்ன சொல்லனுமா…? என தெரிவித்தார்.