செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, நான் சொல்ற எல்லாமே மக்கள் பிரச்சினை தான். நீங்க தான் எதையும் பத்திரிகைகளும் சரி, டிவிலயும் சரி இருட்டடிப்பு பண்றீங்க. அவங்க சொல்றத எதையும் சொல்ல மாட்டேங்கறீங்க.. இதை நான் தொடர்ந்து பார்த்துட்டு இருக்கேன். அந்த சமயத்துல அம்மா ஒரு முடிவு எடுத்தாங்க. நம்மளுக்கும் – மக்களுக்கும் தான் தொடர்பு. நாங்க எப்போதுமே அந்த பாலிசியில் இருப்போம். நம்மளுக்கும் – மக்களுக்கும் தான் தொடர்பு. மக்களுக்கு வேண்டியதை நம்ம செய்வோம், அவங்க நேர்ல பார்ப்போம் என்று ஒரு முடிவுக்கு வந்தோம்.

அப்ப திமுகவுக்கு பயந்துகிட்டு எந்த பத்திரிக்கையும் போடறது இல்ல. அம்மா என்ன செஞ்சாலும் ? அதை முழுசா போட மாட்டாங்க. அதனால நாங்க அதை பத்தி கவலைப்படுவதில்லை.  எங்களுக்கு தேவை மக்கள், மக்களுக்கு என்ன செய்யணுமோ ? அதை நாங்கள் செய்கிறோம். அந்த  முடிவுல தான் நாங்க எப்போதுமே போவோம்,  என்னோட பயணமும் அப்படித்தான் இருக்கும்.

மதுகுடிப்பவர்கள் குறித்து தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி பேசியது தொடர்பாக பேசிய சசிகலா,

எந்த இடத்துல சேர்ராங்களோ…  சேர இடத்துக்கென ஒரு கணக்கு இருக்கும்ல , அதை விட்டுட்டீங்க நீங்க…  அவங்க என்ன சொல்றாங்களோ,  அதை சொல்றாரு. அவர் நல்ல மனிதர் தான். நான் இப்பவும் சொல்லுவேன்…  அவர் அங்கே இருக்கிறார் என்பதால் ?  அவரை தப்பா சொல்ல மாட்டேன். நல்ல மனிதர் தான். அவரு அப்படி சொல்ல வைக்கிறாங்க. வேற வழி இல்ல, அதுதானே..

இப்ப நீங்க பாருங்க டெட்ரா பேக்னு எடுங்க சொல்றாங்க. 90 ML கொடுக்குறோம்னு சொல்றாங்க. டெட்ரா பேர். க்னு எல்லாம் வந்ததுனா…  கூல்டிரிங்ஸ் பூரா அதுல தான் வருது. எத்தனை செக்போஸ்ட்ல,  எவ்வளவு வண்டிய நீங்க செக் பண்ணுவீங்க ? முடியாது. அந்த பேக்க பார்த்தா ஏதோ தெரியல…  கூல்ட்ரிங்ஸ் பாக்கெட் சரி அனுப்பிவிடு வண்டி அப்படித்தானே சொல்லுவாங்க. அப்ப நீங்க என்ன நினைக்கிறீங்க ? கள்ளத்தனமா இதை  விற்பதற்கு உண்டான வேலையெல்லாம் பண்றீங்க என தெரிவித்தார்.