கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு சந்திரன் என்பவர் குடிபோதையில் பாம்பு ஒன்றை தனது கழுத்தை சுற்றி போட்டபடி வந்து அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த அபிஷேக் என்பவரிடம் ஒரு புகைப்படம் எடுக்குமாறு கேட்டுள்ளார். அவரும் சந்திரனை பாம்புடன் சேர்த்து புகைப்படம் எடுக்க முயன்ற போது குடிபோதையில் அவர் கழுத்தை சுற்றி போட்ட அந்த பாம்பு அவரது கழுத்தை நெரிக்க தொடங்கியுள்ளது.

இதில் நிலை தடுமாறிய சந்திரன் கீழே விழுந்துள்ளார் பின்னர் விபரீதத்தை உணர்ந்த அபிஷேக் உடனடியாக பாம்பின் வாலை பிடித்து இழுத்து சந்திரனை காப்பாற்றியுள்ளார். இது தொடர்பான காணொளி ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.