பெங்களூர் உள்ள சப் ரிஜிஸ்டர் அலுவலகத்தின் அருகே மோகன் பாபு என்பவர் தனது BMW காரை மதியம் 1.30 மணி அளவில் நிறுத்தியுள்ளார். மீண்டும் 2.30 மணிக்கு காரை எடுக்க மோகன் பாபு வந்தபோது ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்ததோடு காரில் வைத்திருந்த பணமும் காணாமல் போய் உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர்.

அப்போது அங்கு பைக்கில் இருவர் வந்து ஒருவர் அந்த காரின் கண்ணாடியை உடைத்து ஜன்னல் வழியாக உள்ளே சென்று திருடிவிட்டு பின்னர் பைக்கில் ஏறி தப்பி சென்றுள்ளனர் என்பதை தெரிந்து கொண்டனர். இந்தத் திருட்டில் இடம் பதிவு செய்ய வைத்திருந்த மோகன் பாபுவின் நண்பர் பணம் ஐந்து லட்சம் உட்பட 14 லட்சம் ரூபாய் திருடுபோய் உள்ளது. பட்டப்பகலில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.