டெல்லி திலக் நகரில் கடந்த 20ஆம் தேதி ஒரு கருப்பு பையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் குறித்து சோதனை செய்தபோது அவர் ஸ்விட்சர்லாந்தில் இருந்து வந்தவர் என்றும் அவரது பெயர் நினா பர்கர் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்து அறிந்து கொள்ள காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அப்போது ஜனக்புரி பகுதியை சேர்ந்த குர்தீப் என்பவர் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கிய பழைய கார் ஒன்றில் வந்து சடலத்தை அங்கு போட்டு சென்றது தெரிய வந்தது.

பின்னர் காவல்துறையினர் குர்திப்பை கைது செய்து விசாரித்த போது நினா பர்கரை நான்கு வருடங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் சந்தித்து இருவரும் பழகியதாகவும் அவரை இந்தியாவிற்கு வரச் சொல்லி திருமணம் செய்து கொள்ள கேட்டபோது தனக்கு காதலன் இருப்பதாக மறுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நினா பர்கரை சர்ப்ரைஸ் இருப்பதாக கூறி கை கால்களை கட்டிவிட்டு கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் குர்திப்பை சிறையில் அடைத்தனர்.