பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர்கள் கஜேந்திர யாதவ் – சோபா குமாரி தம்பதி. காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் சோபா குமாரிக்கு போலீஸ் கான்ஸ்டபிள் ஆக வேலை கிடைத்துள்ளது. ஆனால் சோபா குமாரிக்கு போலீஸ் வேலை கிடைத்ததில் இருந்து அவர் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கவில்லை என்று கஜேந்திர யாதவ் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்த கஜேந்திர யாதவ் சோபா குமாரியை அங்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த தனது காதல் மனைவி சோபா குமாரியை கஜேந்திர யாதவ் சுட்டு கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போது ஹோட்டலில் இருந்த பாத் டப்பில் சடலமாக சோபா குமாரி கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கஜேந்திர யாதவை தேடி வருகின்றனர்.