கேரள மாநிலம் கொச்சியில் உள்ள இடப்பள்ளி பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில் எம்டிஎம்ஏ போதை பொருள் அங்கு இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீஸ் அந்த வீட்டில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை அஞ்சு கிருஷ்ணாவை (29) கைது செய்து விசாரணை நடத்தியதில் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த சமீர் என்பவருடன் சேர்ந்து போதை பொருள் விற்பனை செய்தது தெரிய வந்தது. தற்போது நடிகை அஞ்சு கிருஷ்ணாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் சலீமை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.