தென்காசி மாவட்டத்தில் உள்ள சேர்ந்தமரம் பகுதியில் இருந்து நுங்கு ஏற்றிக்கொண்டு மினி லோடு வேன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மினி வேன் மோதி சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மணிகண்டன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.