கரூர் மாவட்டத்திலுள்ள செல்லாண்டி பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் 17 வயது சிறுவன் கொத்தடிமையாக பணிபுரிந்து வந்துள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை கிராம நிர்வாக அலுவலர் நாகமாணிக்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் தொழிலாளர் நல உதவி ஆணையர், வருவாய் அலுவலர்கள் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சோதனை நடத்தி வேலை பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுவனை மீட்டனர். பின்னர் அந்த சிறுவன் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.