விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மீனாட்சி சுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் மீனாட்சி சுந்தரம் தனது மகன் சங்கர் கணேசின் பராமரிப்பில் இருந்துள்ளார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மீனாட்சி சுந்தரம் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

அதேநேரம் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தினர் மீனாட்சி சுந்தரத்தை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து முதியவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீனாட்சி சுந்தரத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.