விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் கற்பகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கற்பகம் அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கற்பகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.