விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் கலைஞர் நகரில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு தீக்ஷிதா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு வருடமாக மீனாட்சி தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

சம்பவம் நடைபெற்ற அன்று மீனாட்சி தனது குழந்தையுடன் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து மீனாட்சியின் தாய் தனது மருமகன் சந்தோஷ்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். பிறகு குடும்பத்தினர் மீனாட்சியையும், குழந்தையையும் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை.

இதுகுறித்து சந்தோஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் மதுரையை சேர்ந்த ஹரிஷ் என்பவர் தனது மனைவி மற்றும் மகளை கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.