கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து முட்டைக்கோஸ் காய்களை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தீனா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிளியநல்லூர் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தீனா லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.