விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடி கிராமத்தில் விவசாயியான அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அண்ணாமலை அவரது வயலில் மணிலா அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி அண்ணாமலை காயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அண்ணாமலையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அண்ணாமலை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.