திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற 39 ஆயிரத்து 30 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த விமானிகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் திருச்சியில் சேர்ந்த அபூபக்கர் என்ற பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரது உடைமைகளை மத்திய தொழில் பிரிவு பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது ரூபாய் 39 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தது. அவற்றை துபாய்க்கு அவர் கடத்த முயன்றது தெரிய வந்தது. இதனை அடுத்து அதனைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர் சுங்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவர்கள் அபூபக்கரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.