12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் மே 13ஆம் தேதி வரை, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியின் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்காலக் கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.