ராமநாதபுரத்தில் தந்தை இறந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவி ஆர்த்தி 600க்கு 487 மார்க் எடுத்து சாதித்துள்ளார். தந்தை மறைவால் இவரது குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளது. வீட்டில் பாத்ரூம் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு படித்த அவர், அடுத்ததாக படிக்க பணம் இல்லை என கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது. மேலும் தனது படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.