கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சூர், பாலக்காடு, கோவை, ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று சேலம் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வந்தே பாரத் துறையில் சேலத்தில் நின்று செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.