தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி  திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் கடந்த சனிக்கிழமை கத்திரி வெயில் காலமும் தொடங்கியது. இருந்தாலும் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அதன்படி சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் காலையிலேயே மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.