பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஜே.சி.டி பிரபாகரன், அருமை சகோதரர் புகழேந்தி அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் வேகமாக… விறுவிறுப்பாக…. சில கருத்துக்களை எல்லாம் சொல்லி அமர்ந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். தலைமை என்ன முடிவு எடுக்கப் போகிறதோ,  என்கின்ற ஆர்வம் இருக்கும். இப்படி எடுத்தால் நன்றாக இருக்கும்…. அப்படி எடுத்தால் நன்றாக இருக்கும் என்று வயது காரணமாக அல்லது அனுபவம் காரணமாக பல்வேறு உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாம் வரக் கூடிய நேரம் தான் இது.

ஆனால் ஒன்றை மட்டும் நான் ஒரு உதாரணத்தின் மூலமாக உங்களுக்கு விளக்கிட விரும்புகின்றேன். உணர்ச்சிவசப்படுகின்ற நேரம் அல்ல இது,  உற்சாகமாக நாம் செயல்படக்கூடிய தருணத்தை எட்டி இருக்கின்றோம்.  ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதி கோட்டை தொடுகின்ற போது தான்….

லாவகமாகவும்,  வேகமாகவும்,  சிறந்த சிந்தனையோடும் வெற்றிக்கனியை நாம் எட்டிப் பறிக்க வேண்டும். அந்த வெற்றிக்கனி  கண்ணுக்கு எட்டிய  தூரத்தில் தான்  இருக்கிறது. அந்த வெற்றிகனியை பறிக்கின்ற கரங்கள் அண்ணன் ஓபிஎஸ்கரங்கள் தான் என்பதை தமிழ்நாடு பார்க்கப் போகிறது. மாண்புமிகு அண்ணன் அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும்,  கட்டுப்படுகின்ற கண்ணியமிகு கூட்டமாக தான் நாம் வளர்ந்திருக்கின்றோம், நம்மை ஆட்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.