
திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய தயாநிதி மாறன் MP பேசும் போது, எனக்கு நடந்த உண்மை கதையை சொல்ல சரியான மேடை இது தான். நான் திமுக, எங்க அப்பா திமுக எங்க தாத்தா திமுக, தம்பி திமுக, குடும்பமே திமுக. ஹிந்தி எதிர்ப்பு.. நாங்கள் எல்லாம் படித்தது ஸ்டேட் போர்டு ஸ்கூல். சிபிஎஸ்இ ஸ்கூலில் நாங்க படிக்க மாட்டோம்.
ஏனென்றால், நான் இந்தி படித்து என்ன புடுங்க போகிறேன் என சொல்லி நாங்க ஹிந்தி படிக்கவில்லை. எனக்கு பொண்ணு பிறக்குறா… என் பொண்டாடி சிபிஎஸ்சியில் சேருங்க என சொல்லுறாங்க. நான் முடியாது.. சண்டை… குடும்பத்தில் சண்டை…. சிபிஎஸ்சியா ? ஸ்டேட் போர்டா ? நான் இல்லை ஸ்டேட் போர்டு தான் என உறுதியாக இருந்தேன்.
இல்லை அவ மெடிசன் படிக்கணும் என என் மனைவி சொல்கிறார். நீ எம்மா கவலைப்படுகிறாய்…. என் கலைஞர் எவ்வளவு பேருக்கு சீட் வாங்கி கொடுத்து இருக்காரு… எங்க அப்பா எவ்வளவு பேருக்கு சீட் வாங்கி கொடுத்து இருக்காரு… மாமா ஸ்டாலின் எவ்வளவு பேருக்கு சீட்டு வாங்கி கொடுத்து இருக்காரு. நானே மந்திரியா இருக்கும் எவ்வளவு பேருக்கு சீட்டு வாங்கி கொடுத்திருக்கிறேன்… என் பொண்ணுக்கு நான் வாங்கி தர மாட்டேனா என்று மார்தட்டி நின்றேன் என பேசினார்.