ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீரென ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களும், அங்கிருந்த கடைகளின் உரிமையாளர்களும் தெருக்களில் குப்பைகளை கொட்டியது தெரியவந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்குமாறு பேரூராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.