சேலம் மாவட்டத்தில் உள்ள மலையாள பட்டி கிராமத்தில் வல்லரசு என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது வல்லரசுக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த கண்ணனின் மனைவி சுகுணாவுக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுகுணா கணவரை பிரிந்து வல்லரசுவை திருமணம் செய்து கொள்வதற்காக மலையாளபட்டிக்கு வந்துள்ளார்.

இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியுள்ளனர். கடந்த 31-ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கோபமடைந்த வல்லரசு சுகுணாவை வெட்டி கொலை செய்து உடலை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. இதனால் வல்லரசுவை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர் பாக்யராஜஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.