தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கத்தரி நத்தம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அந்த ஊரில் புகழ்பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்ற சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தெருநாய்கள் கறவை மாடுகள், ஆடுகளை கடித்து குதறியது. இதனால் 3 மாடுகளும், ஒரு ஆடும் பரிதாபமாக உயிரிழந்தது.

அது மட்டும் இல்லாமல் அண்ணாதுரை, கோபால், அவரது மனைவி சங்கீதா, யோகேஷ் ஆகிய நான்கு பேரையும் நாய்கள் கடித்து குதறியது. இதனால் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். அந்த கிராமத்தில் தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகத்தினர் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.