பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த ஆஸ்கார் விருதை வெல்ல ராஜமௌலி பல கோடிகளை செலவழித்ததாகவும், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 1.15 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் அண்மைக்காலமாகவே தகவல்கள் பரவியது. இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் டிடிவி தனய்யா தனியார் யூடியூப் சேனல் ஒன்று அளித்த பேட்டியில் இது பற்றி கூறியுள்ளார்.

அதாவது ஆஸ்கர் விருதுக்கு ராஜமவுலி செலவு செய்தாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் நான் அதற்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. ஆர்ஆர்ஆர் படத்தை தயாரிக்க 450 கோடி செலவானது. படம் ரிலீஸ் ஆன பிறகு எனக்கு திருப்திகரமான லாபமும் கிடைத்தது என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கு ஊடகங்கள் ராஜமௌலி ஆஸ்கார் விருதுக்காக செலவு செய்ததாக செய்திகள் வெளியிடும் நிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் தயாரிப்பாளர் டிடிவி தனய்யா கலந்து கொள்ளாதது குறித்தும் விமர்சித்து வருகிறது.