கொல்கத்தாவின் வடக்கு 24-பர்கானாஸில் உள்ள தாகூர்நகர் ரயில் நிலையத்தில் ஷர்மிளா பிரமானிக் என்ற 25 வயது பெண், காதுகளில் இயர் போன் அணிந்தபடி தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார் அப்போது அங்கே வந்த கொல்கத்தா-குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டுசம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வியாழன் அன்று காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது,

சந்த்பாராவில் உள்ள தகுரியாவைச் சேர்ந்த நோயறிதல் மையத்தின் ஊழியரான ஷர்மிளா, வேலைக்குச் செல்லும் வழியில் தனது மொபைல் போனில் மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் சக பயணிகள்  அவரைக் காப்பாற்ற விரைவாக அருகில் உள்ள ஜிபாபன் ரத்தன்தார் துணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் இங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர். இதை அடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.