கனக சபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரதேச சட்டத்திற்கு எதிரானது என அறநிலையத்துறை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து கடந்த 2022 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எதிர்த்து தான் சென்னை சேர்ந்த டி.ஆர் ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குக்கு பதில் அளிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தான் பதில் மனுவை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இன்று தாக்கல் செய்திருக்கிறார். அதில் சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்டு,  பொதுமக்களுடைய பங்களிப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோயில் ஒரு பொது கோவில் என்றும்,  தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல எனவும் சென்னை உயர் நீதிமன்றமும்,  உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளதாக பதில் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக பின்பற்றி வந்த நிலையில்,  கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த தரிசனம் நிறுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்க  உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பக்தர்களை கனக சபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும் என 2022 ஏப்ரல் 20-ல் உத்தரவிட்டிருப்பதாக அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த உத்தரவின் அடிப்படையில் தான் கொரோனா கட்டுப்பாடுகள்  விளக்கை கருத்தில் கொண்டும்,  பொதுமக்கள், தீட்சிதர்கள்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,  மாவட்ட ஆட்சியர் அளித்த அந்த அறிக்கைகளை பரிசீலித்து கனக சபையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் மனுவில் தெரிவிக்கப்படுத்தப்பட்டுள்ளது.

கனக சபையில் தரிசனம் செய்யும் நடைமுறை பல ஆண்டுகளாக பின்பற்றி விட்டு வரும் நிலையில் அதை மாற்ற தீச்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும்,  கனக சபை தரிசனத்திற்கு அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பது ஆலய பிரவேச சட்டத்திற்கு எதிரானது எனவும் பதில் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் கனக சபையில் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணை மூலம் தங்களது உரிமை பாதிக்கப்படுவதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில்,  எந்த தகுதியும் இல்லாத இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் பதில் மனுவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் பதில் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு வழக்கு விசாரணையை டிசம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது.