அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை  சந்தித்தார். அப்போது பேசிய அவர், தினமும் போயிட்டு press-அ சந்திச்சு…. கேமராவை எனக்கு பின்னாடி….. தலைக்கு பின்னாடி கேமரா வெச்சு….. youtube காக கன்டென்ட் கொடுக்கிறவன் நான் இல்ல…. நான் எப்ப வந்து நியாயமா சொல்லனுமோ,  அந்த கருத்துக்களை சொல்லுவேன். எப்ப வேலை செய்யனுமோ,  செய்வேன்…. கோவிட் டைம்ல கூட இந்த தம்பி சகோதரர் வீட்ல போய் அஞ்சு லட்சம் கேஷ் கொடுத்துட்டு வந்தேன். அப்ப அதெல்லாம் வராது.

ஏன்னா சரத்குமார் செஞ்சா வெளிய வராது. நான் வந்து பல உதவிகள் செய்யும்போது நீங்க எல்லாம் இல்லைன்னு சொன்னதுக்கு காரணம் என்னன்னா….  சோசியல் மீடியா எல்லாம் அப்போ கிடையாது. இன்னைக்கு எல்லாம் அஞ்சு ரூபாய் கொடுத்தாலே பதிவு பண்ணிக்கிறாங்க. நான் கொடுத்தது கோடி கணக்குல ஹெல்ப் பண்ணியிருக்கேன். அதனால தான் இன்னைக்கு இறைவன் எனக்கு நல்ல பொசிஷனை கொடுத்து,  நல்லபடியா அமர வச்சிருக்கான்.

என்னுடைய உழைப்பு,  என் உள்ளத்துக்கு தெரியும்.  நான் எவ்வளவு தூரம் மக்களுக்காக சேவை செஞ்சி இருக்கேன்னு எனக்கு தெரியும்…  என் சகோதரர்களுக்கு தெரியும்….  நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.  நிறைய பண்ணியாச்சு….  ரசிகர் மன்றம் காலத்துல டெய்லி இரவு 2 மணி வரை உட்கார்ந்து,  கிட்னி டிரான்ஸ்பர்  எவ்வளவு கொடுக்கலாம் ?

இவருக்கு தையல் மிஷின் வேணுமா ? எவ்வளவு கொடுக்கலாம்….  அப்படி தையல் மெஷின் கொடுக்கின்றது  வர்றதுக்கு முன்னாடியே நான் கொடுத்து இருக்கேன்…  லேப்டாப் இவர்களுக்கு எல்லாம் அரசு திங்க் பண்றதுக்கு முன்னாடியே லேப்டாப் கொடுத்து இருக்கேன்….  இதெல்லாம் தெரியாது இல்லையா?  இதெல்லாம் தோண்டி எடுத்து…  ஓபன் சோர்ஸ்ல இருந்தா ? தோண்டி எடுத்து எல்லாத்துக்கும் திருப்பி போட வேண்டிய நிலைமை எனக்கு கிடையாது என தெரிவித்தார்.