பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் 2 பந்துகளை மட்டும் வீசிய தீபக் சஹாருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் மிகப்பெரிய காயம் அடைந்திருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவர் இந்த ஐபிஎல்லில் இருந்து விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது CSKவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது