ஆந்திர பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் கோதாவரி மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சாய் சுப்ரியா. இந்நிலையில் சாய் சுப்ரியாவின் தாய் மற்றும் சகோதரர் இருவரும் வந்து மதுசூதனிடம் என்னுடைய மகள் எங்கே? என கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவரிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால் அவர்கள் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்திய போது, வாரண்ட் இல்லாமல் வீட்டுக்கு வரக்கூடாது என மதுசூதனன் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனையடுத்து இருட்டு அறையில் முடங்கிய நிலையில் சாய் சுப்ரியா இருந்தது தெரியவந்துள்ளது. அவரது கணவரால் அந்த இருட்டு அறையில் அவர் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்.

மேலும் சுப்ரியா 11 ஆண்டுகளாக அந்த இருட்டு அறையில் வசித்து வருகிறார் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து  மதுசூதன் மீது கோர்ட் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியுள்ளனர். அதன் பின் சுப்ரியா விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சுப்ரியா கூறியதாவது, நான் எனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு எனது வீட்டிற்கு செல்ல விரும்புகிறேன். நல்ல வேலையாக இந்த இடத்தில் இருந்து வெளியே வந்து விட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.