திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ், அருண்குமார், சத்தியமூர்த்தி உள்பட 15 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த சத்தியமூர்த்தி, தீபன் ராஜ், அருண்குமார் ஆகியோர் ஆனந்தராஜை குத்தி கொலை செய்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்தியமூர்த்தி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மீதமுள்ள 12 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.