சேலம் மாவட்டத்தில் உள்ள வாழைத்தாசம்பட்டி காட்டுவளவு பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க ஆசைப்பட்டார். இதனை அறிந்த திருச்செங்கோட்டில் வசிக்கும் சரவணன், பழனிசாமி, முருகன், ஈரோட்டை சேர்ந்த மோகன், துரை ஆகியோர் அர்ஜுனனிடம் பேசி 1 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி, அதற்கு ஈடாக 5 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்து வாங்கிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக அவர்கள் அர்ஜுனனின் வங்கி கணக்கிற்கு 11 லட்சம் ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளனர். மீதமுள்ள தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து அர்ஜுனன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரவணன், பழனிசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.