வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் பத்மசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை குஜிலியம்பாறையில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டு காட்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அருகே சென்றபோது லாரியின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.

இதனை பார்த்ததும் பத்மசேகர் உடனடியாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாரி முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.