தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கோவில் பூசாரியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சுப்பிரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சையத் சுப்பிரமணிக்கு 13 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.