சென்னை மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் சுலோச்சனா திடீரென தனது மகள் மீனாட்சி மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சுலோச்சனா பரிதாபமாக உயிரிழந்தார். மீனாட்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் தனது காலத்திற்குப் பிறகு மகளின் நிலை என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இந்த முடிவை எடுத்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.