சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூபில் ஒரு குறிப்பிட்ட வீடியோவை லைக், ஷேர் செய்தால் பணம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அந்த பெண் செய்ததால் அவர் 1400 ரூபாய் கிடைத்தது.

இதனையடுத்து அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி அந்த பெண் 3 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கூறியபடி அவருக்கு பணம் திரும்ப வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.