கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடி கிளிஞ்சிக் குப்பத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சொந்த தொழில் தொடங்குவதற்காக செல்வகுமார் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி கடனை திருப்பிக் கொடுக்க இயலவில்லை.

இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று செல்வகுமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.