விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் ராமராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராமராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றம் ராமராஜுக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தன்னடையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.