ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்திராகாந்தி நகரில் எலக்ட்ரீசியனான சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியையும், குழந்தையும் விட்டு பிரிந்து வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு சதீஷுக்கு கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் 14 வயது மகளை திருமண ஆசை வார்த்தை கூறி சதீஷ் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் சதீஷுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.