கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பி.என் புதூரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைராஜ் தனது மனைவியின் இ-மெயில் ஐடியை ஹேக் செய்து அதனை பயன்படுத்த முடியாமல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து பிரியா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் துரைராஜை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் துரைராஜுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது.