ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.என் பாளையம் கடம்பூர் சாலையில் இருக்கும் பெரியசாமி கோவில் அருகில் இருக்கும் பாறை மீது ஒரு ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு, இந்திராணி என்பது தெரியவந்தது. கணவன் மனைவியான இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.