கரூர் மாவட்டத்தில் உள்ள புன்னம் சத்திரம் பகுதியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரியில் 3 யூனிட் தரும் கற்கள் இருந்தது தெரியவந்தது. ஆனால் லாரி டிரைவரிடம் கற்கள் கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டும், பர்மிட்டும் இல்லை. இதனால் லாரி டிரைவரான பிரபு என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.