ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டி நேரு நகர் ரேஷன் கடை வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சரிதா(29) என்ற மனைவியும், பவன் கிருத்திக்(3) என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த சரிதா தனது மகனுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து சரிதாவின் தாய் ஜெயா புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தாய் மற்றும் மகனை தற்கொலைக்கு தூண்டியதாக செல்வராஜை போலீசார் கைது செய்தனர்.