பிரபல சண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சென்ற சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது பேசிய அவர் உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என பேசி இருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு தற்போது எதிர்ப்புகளும் ஆதரவுகளும் எழுந்து வருகின்றது. மேலும் அவதூறு கருத்துக்கு புகாரின் பேரில் போலீசார் பாண்டிச்சேரியில் வைத்து கனல் கண்ணனை கைது செய்தார்கள். மேலும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி காலை மற்றும் மாலையில் 4 வாரங்களுக்கு அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டது. மேலும் 3 மாதத்திற்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.