சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் கோவையை சேர்ந்த துணை ஒப்பந்ததாரரான விஷ்ணுவிடம் திரு.வி.க நகர் பல்லவன் சாலையில் இருக்கும் கால்பந்தாட்ட மைதானத்தில் குறிப்பிட்ட பணியை செய்யுமாறு ஒப்படைத்தார்.

இதற்காக விஷ்ணுவிடம் 2 கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை விஷ்ணு பணியை செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விஷ்ணுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.